தமிழகத்தில் 35 டி.எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்:
35 DSP transfer in Tamilnadu
தமிழகத்தில் 35 போலீஸ் டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றிய காவல் உதவி ஆணையர்களுக்கு இடம் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிகளுக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்தவர் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் என்பவர் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி பட்டாபிராமன் காவல் உதவியாளர் இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்தவர் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
English Summary
35 DSP transfer in Tamilnadu