திருவண்ணாமலை || நண்பரை கட்டி வைத்து... இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... 3 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் நண்பரை கட்டி வைத்துவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விஜய மாநகரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தனியார் விடுதியில் தங்கி ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து ஆண் நண்பர் ஒருவருடன் இளம்பெண் மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது நமண்டி ஏரிக்கரை அருகே வந்த போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இவர்களை மடக்கி பிடித்து இளம்பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி கட்டி வைத்துள்ளனர். பின்பு இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடி வந்துள்ளார்.

அப்பொழுது, அங்கு ஆள் நடமாட்டம் இருந்ததால் இளம் பெண்ணை துரத்தி வந்து மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இளம்பெண் தூசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு திருவடிராயபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், ரஞ்சித் குமார், விக்னேஷ் ஆகிய மூன்று வாலிபர்களையும் கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் கொடுத்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 youths arrested for sexually harassing a young woman in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->