ஓடும் பேருந்தில் 6 பவுன் தங்க நகையை ஆட்டையபோட்ட 3 பெண்கள்.! - Seithipunal
Seithipunal


செஞ்சி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 6 பவுன் தங்க நகையை ஆட்டையபோட்ட மூன்று பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மனைவி சூரியகாந்தி(68) சென்னையில் இருந்து பேருந்தில் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மூன்று பெண்கள் ஏறியுள்ளனர். இதில் சூரியகாந்தியின் பக்கத்தில் இரண்டு பெண்கள் அமர்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து அந்த மூன்று பெண்களும் பேருந்தில் இருந்து நாட்டார்மங்கலம் பகுதியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சூரியகாந்தி கழுத்தில் பார்த்தபோது, அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சியாடைந்த சூரியகாந்தி, இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார், ஓடும் பேருந்தில் ஆறு பவுன் செயினை ஆட்டையபோட்ட மூன்று பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 women stole 6 pounds of gold jewelery from a moving bus in gingee near


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->