முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. மூவர் கைது.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பணத்தை பங்கு போடுவதில் நடைபெற்ற தகராறில் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி பகுதியை ஆவடி கவுரிபேட்டை கம்பர் தெருவை சேர்ந்தவர்  மனோஜ். இவர் சொந்தமாக குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். ஏற்கனவே பிரபு சதீஸ் உள்ளிட்ட 3 பேரால் ஏற்கனவே தண்ணீர் விற்ற பணம் 10,000 பங்கு போடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று தண்ணீர் வினியோகம் செய்து விட்டு வரும் வழி மறித்து பிரவு, சதீஸ் உள்ளிட்ட மூவர் அவரை அடித்தே கொலை செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும், அங்குள்ள் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், பிரபு சதீஸ் உட்பட 3 பேர் திருவள்ளூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் மீதுவழக்குபதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 persons arrested in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->