சென்னை மயிலாப்பூரில் பயங்கரம்: 17 வயது மாணவன் உள்பட 03 பேருக்கு அரிவாள் வெட்டு..! - Seithipunal
Seithipunal


சென்னை மயிலாப்பூர் அருகே பள்ளி மாணவன் உள்பட ஒரே தெருவைச் சேர்ந்த 03 பேர் நேற்றிரவு அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, கவியரசு மற்றும் 17 வயது பள்ளி மாணவன் ஆகிய 03 பேருக்கு முன்பகை காரணமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் மூவருக்கும் தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மைத்ரன் மற்றும் 17 வயது சிறுவன் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் ஏற்பட்ட பகை காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 people including a student hacked to death with a sickle in Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->