#BREAKING || கன்னியாகுமரி மீனவர்கள் 200 பேர் நடுக்கடலில் தவிப்பு.. குடும்பத்தினர் அச்சம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 200 மீனவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 200 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். இவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 15 விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இவர்கள் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பாகவே மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

200 Kanyakumari fishermen are stranded in the middle of the sea


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->