தூத்துக்குடியில் பெரும் சோகம்.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் கர்ப்பிணியான கார்த்திகா சிக்கிக் கொண்டார். அவரது தாயார் காளியம்மனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்தநிலையில் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் இருந்துள்ளது. இரு நிலையில் ஓடுகள் இருந்ததால் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம்தான் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அதன் பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people including a pregnant woman died roof of the house collapsed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->