பெருந்துறை அருகே கோர விபத்து - லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலி.! 10 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து இன்று காலை 5.45 மணியளவில் பெருந்துறை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன்(55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் நேசன் (28) என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed 10 injured in lorry bus accident in perundurai erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->