கோவையில் கொடூரம் : 10 வயது சிறுமி 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்.! 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


கோவையில் இரண்டு வருடங்களாக பத்து வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிழக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அதிர்ஷ்டராஜ் (27). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு அழைத்து வந்த அதிர்ஷ்டராஜ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிர்ஷ்டராஜியின் நண்பர் சுரேஷ்பாபும், அதிர்ஷ்டராஜியும் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து சம்பவத்தன்று சிறுமி அழுதபடி வந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து சிறுமி நடந்ததைப் பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ்பாபுவை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடந்த இரண்டு வருடங்களாக அதிர்ஷ்டராஜும், சுரேஷ் பாபுவும் சிறுமியையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 arrested for raping a 10 year old girl in Coimbatore for 2 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->