"அழகிய லைலா" மீண்டும் வருகிறார்! 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரையில் ரம்பா! - Seithipunal
Seithipunal


90-களின் இளைஞர்களின் இதயத்துடிப்பாக விளங்கிய 'தொடை அழகி' ரம்பா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்பத் தயாராகிவிட்டார். 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கட்டிப்போட்ட அந்த "அழகிய லைலா", தனது செகண்ட் இன்னிங்ஸை அசுர வேகத்தில் தொடங்கியுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமாரைத் திருமணம் செய்துகொண்டு கனடாவில் குடியேறினார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

தமிழில் 2010-ல் வெளியான 'பெண் சிங்கம்' படத்திற்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் நடுவராகத் தோன்றி வந்தார்.

அதிரடி ‘ரீ-என்ட்ரி’ :
தற்போது 49 வயதாகும் ரம்பா, மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன:

ஃபிட்னஸ்: பழைய ரம்பாவை மீண்டும் திரையில் கொண்டுவர, கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் தனது உடலமைப்பை மீண்டும் 'ஸ்லிம்' ஆக மாற்றியுள்ளார்.

ஏற்கனவே சில இயக்குநர்கள் சொன்ன கதைகளைக் கேட்டுள்ள அவர், அதில் தனக்கு ஏற்றவாறு இருக்கும் ஓரிரு கதைகளைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.

16 வருடக் காத்திருப்பிற்குப் பிறகு தனது ஃபேவரிட் நாயகியை வெள்ளித்திரையில் காணப்போகும் உற்சாகத்தில் 90-ஸ் கிட்ஸ் சமூக வலைதளங்களில் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress ramba re entry


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->