மயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.!
17 years old women raped by unknown
நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமகள் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சூறையாடப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் அவரை பக்கத்து வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த சிறுமிக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருவாரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வருவதும், அப்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
சிறுமிக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அதில் மயக்க மருந்து கொடுத்து நினைவிடத்தை செய்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார் ராஜேஷ். இதனை தொடர்ந்து, சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
17 years old women raped by unknown