வளர்ப்பு மகளை தொடர் பாலியல் அளித்த குடும்பம்... சென்னையில் நடந்த கொடூரம்..!
17 Years Old girl raped by her step father and brothers
வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது பெற்றோர் சிறு வயதில் இறந்து விட்டதா தானும் தனது தங்கையும் உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக கூறினார். அப்போது ஷரிப் ஜமீலா என்ற இவர்களுக்கு பெண் குழந்தை இல்லாததால் தனது தங்கையை தத்தெடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்ததால் தத்து கொடுத்தாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் தனது 17 வயது தங்கை தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர் சொன்ன செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். அவர் வளர்ப்பு தந்தையான ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் இரவு நேரங்களில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளனர். முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து தனது வளர்ப்புத் தாயிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வளர்ப்பு தாயும் கண்டுகொள்ளவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் அவர்களிடம் தப்பித்து தன்னை வந்து தங்கை சந்தித்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை விசாரணை செய்த காவல்துறையினர் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் மற்றும் அவரது மனைவி ஜமீலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவரின் இளைய மகனை தேடிவருகின்றனர். வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
17 Years Old girl raped by her step father and brothers