17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. 17 வயது சிறுவன் போக்சோவில் கைது.!
17 years old girl get baby in kallakuruchi
உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த விவகாரத்தில், 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் மூன்று ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமி தனது வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்து போது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்தது. 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக புக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
English Summary
17 years old girl get baby in kallakuruchi