தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது.! - Seithipunal
Seithipunal



தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.

அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் பேசாலை பகுதி வழியாக வர முயன்றவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதில், கைது செய்யப்பட்ட 14 பேரில், 5 பெண்களும் 5 சிறுவர்களும் அடங்குவர்.  இதனையடுத்து 14 இலங்கை தமிழர்களையும் மன்னார் போலீசிடம் இலங்கை கடற்படை ஒப்படைக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 Sri Lankan Tamils ​​arrested for trying to enter Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->