ஸ்ரீ பெரும்புதூர் அருகே நூதன முறையில் ஏ.டி.எம் -ல் கொள்ளை.!
13 lakhs money robbery in sri perumbuthur atm
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை, பிரதான சாலையில் செயல்பட்டு வரும் சவுத் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த 6-ந் தேதி ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். ஆனால், வாடிக்கையார்களால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.உடனே அதிகாரிகள் ஏ.டி.எம். நிபுணர்களை வரவழைத்து ஏடிஎம்மில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், சம்பந்தபட்ட ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப்பட்ட 2 நாட்களுக்கு பிறது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம நபர்கள் வருவதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தும் நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
13 lakhs money robbery in sri perumbuthur atm