படிக்க வற்புறுத்தியதால் 12ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் 12ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் வாசு (17) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் வாசுவுக்கு படிக்க விருப்பமில்லாத நிலையில், பெற்றோர் படிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனால் வாசு மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த வாசு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th class student commits suicide in madurai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->