10ம் வகுப்பு செய்முறை தேர்வு 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் வரும் 31ம் தேதி வரை 10ம் வகுப்பு செய்முறை தேர்வை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th practical exam 1 lakh students absent


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->