ஏரியில் மூழ்கி 10ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசக்தி (வயது 16) என்ற 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பள்ளி விடுமுறைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் என்ற கிராமத்தில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தாத்தாவுடன் அங்குள்ள ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடி மேய்க்க சிறுவன் சென்றுள்ளார். இதனிடைய தாத்தா ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சிறுவன் ஏரியில் குளித்துள்ளார். அப்போது சிறுவனை திடீரென காணவில்லை. இதனையடுத்து சிறுவன் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து சிறுவன் ஏரியல் மூழ்கி இருக்கலாம் இன்று சந்தேகப்பட்ட அவர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி தேடினர்.

அப்போது சிறுவன் ஏரியில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class school student drowned in the lake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->