குளிக்க சென்ற இடத்தில் 04 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!
04 girls tragically drowned while bathing
மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இரு வேறு சம்பவங்களில், 04 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் ரோஷ்னி (9) மற்றும் பிரசன்யா (11) ஆகிய இரண்டு சிறுமிகள் ஊரணியில் குளித்துக் கொண்டிருந்த போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் மதுரை அப்பன் திருப்பதி அருகே கண்மாயில் குளித்த பிரியா (11) மற்றும் அன்னலட்சுமி (12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதமமாக உயிரிழந்துள்ளனர். மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குளிக்க சென்ற இடத்தில் நான்கு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை உள்ளூர் மக்கள் உதவியுடன், மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்ட்டுள்ளனர். சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து மதுரை மற்றும் ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
04 girls tragically drowned while bathing