சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 03 நபர்கள் அதிரடி கைது..!
03 people arrested for possession of methamphetamine in Thiruvallikeni Chennai
திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 03 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 06 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1,000/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப. உத்தரவின் பேரில், நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையிலான ANT தனிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினரும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவர்கள் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். தலைநகர் சென்னையின் பெருநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தனிப்படையினர் மற்றும் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து நேற்று T.H ரோடு, CNK ரோடு சந்திப்பில் விசாரணை செய்துள்ளனர்/
அப்போது, மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 1.ஜியாவுதீன் வ/48, திருவல்லிக்கேணி, 2.நயிமுல்லா, வ/44, திருவல்லிக்கேணி, சென்னை 3.சையத் வசிமுதீன், வ/28, இராயப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 06 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1000 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
03 people arrested for possession of methamphetamine in Thiruvallikeni Chennai