ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்.! - Seithipunal
Seithipunal


இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. 

16 அணிகள் பங்கேற்க உள்ள இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. சூப்பர் -12 சுற்று குருப் -1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், குருப் -2 பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் நேரடியாக மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கான டிக்க்ட் விறனை நேற்று முன் தினம் தொடங்கியது. டிக்கட் விலை குறைந்தபட்சம் 1,450 ரூபாயாகவும், அதிகபட்சமாக 8,200 ரூபாய் வரையிலும் நிர்னயிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்த ஆட்டத்தை சுமார் 80,000 பேர் நேரில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Cup Cricket India Pakistan Tickets


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->