அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி! - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில்,இந்திய வீரர்  போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், அதன் தொடரின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்- டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதற்கிடையே நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரரான ஜெர்மனியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US Open Tennis Bopannas shock defeat in the semi finals


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->