சச்சினுக்கு இனி இது கிடையாது கைவிரித்த மகாராஷ்டிர முதலமைச்சர்.!
sachin x security withdraw by maharastra government
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிர அரசு விலக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கக்கூடிய முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த மறு ஆய்வினை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமைலான மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது. இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த ‘X’ பிரிவு பாதுகாப்புபை அம்மாநில அரசு நீக்கியுள்ளது.
‘X’ பிரிவு பாதுகாப்பின் கீழ் சச்சினுக்கு 24 மணி நேரமும் ஒரு காவலர் தொடர்ந்து பாதுகாப்பை வழங்கி வந்தார். இனி இந்த பாதுகாப்பு சச்சினுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் வெளி இடங்களுக்கு சச்சின் செல்லும் போது தேவைப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இதுவரை Y+ பிரிவு பாதுகாப்பில் இருந்து வரும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவிற்கு தரம் உயர்த்தப்பட்டு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போலவே உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நாயக், முன்னாள் பாஜக அமைச்சர்கள் ஏக்நாத் கட்சே, ராம் ஷிண்டே, மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிக்காம் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தரம் குறைத்து மகராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
sachin x security withdraw by maharastra government