தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் : ரோகித் சர்மாவிற்கு பதில் இவர்தான் கேப்டன்.? வெளியான தகவல்.!!
SA ODI Series may be KL Rahul Captain
இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியது. டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது ஒரு அறிவிக்கப்படவில்லை.
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்கா தொடரின்போது முதல்முறையாக கேப்டன் பொறுப்பு வகிக்க இருந்தார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரோகித் சர்மா குணமடைந்து விடுவார் என கூறப்பட்டது.
தற்போது அவர் இந்திய தேசிய அகாடமியில்சிகிச்சை பெற்று, அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு ரோகித்சர்மா குணமடையவில்லை என்றால், அவருக்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் போட்டியில் புதிதாக துணை கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள கேஎல் ராகுலுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஆங்கில வார இதழில், ரோகித் சர்மா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் குணமடையவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கையாக தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே எல் ராகுலை நியமிக்க உள்ளார் என தெரிவித்துள்ளனர்.
English Summary
SA ODI Series may be KL Rahul Captain