#IPL2022 : ராஜஸ்தானை தோற்கடித்து பெங்களூர் அணி 2-வது வெற்றி.!
RCB beat by rajasthan 4 wickets
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்களும், ஹெட்மையர் 42 ரன்களும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக 45 ரன்களும் தினேஷ் கார்த்திக் 42 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
English Summary
RCB beat by rajasthan 4 wickets