புரோ கபடி இறுதிப் போட்டி! டெல்லி, பாட்னா அணிகள் பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் பாட்னா டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டித் தொடரில் பாடனா, உத்திர பிரதேசம், டெல்லி, பெங்களூரு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் பாட்னா அணி 38-27 என்ற புள்ளிக் கணக்கில் உத்திர பிரதேச அணியையும், டெல்லி அணி 40-35 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதற்கு முன்பு பாட்னா அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முனேதியுள்ளது. அந்த மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறையும் கோப்பையை வென்றால் நான்கு முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை பாட்னா அணி நிகழ்த்தும்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள டெல்லி அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

இந்த ஆண்டு தொடரில் இரண்டு முறை பாட்னா அனியை வீழ்த்திய நம்பிக்கையில் டெல்லி அணி இறுதி போடியில் களம் காண்கிறது. அதே நேரத்தில் இரண்டு முறை கண்ட தொடர் தோல்விக்கு பழி தீர்த்து கோப்பையை முனைப்பில் பாட்னா அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Kabbadi final Delhi Patna


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->