புரோ கபடி லீக் :  2வது முறையாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் 9வது சீசன் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

லீக் போட்டிகளின் முடிவில் முதல் இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளிகள்), புனேரி பால்டன் (80 புள்ளிகள்) ஆகிய 2 அணிகளும் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இதனையடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பான்தர்ஸ் - பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 49-29 என்ற புள்ளி கணக்கில்  வெற்றி பெற்று ஜெய்ப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி - புனே உடன் மோதியது. இந்த போட்டியில் 39-37 என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பல்தன் அணியும் மோதின.

இதில், முதல் பாதி முடிந்த நிலையில், 14 - 11 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற 2வது பாதியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய ஜெய்ப்பூர் அணி ஆட்ட நேர முடிவில் 33 - 29 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி தொடரின் முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக ஜெய்ப்பூர் பிங்க் பான்தர்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro kabaddi league season 9 Jaipur pink panthers champion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->