என்னுடைய இந்த தங்கப் பதக்கம்... நீரஜ் சோப்ராவின் அந்த மனசு! - Seithipunal
Seithipunal


"இந்த தங்கப் பதக்கம், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது” என்று, உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த பின் நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நேற்று உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில், இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, டி.பி.மானு ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், இந்திய வீரர்கள் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடமும்,  டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடமும் பிடித்தார். 

நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். 

தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neeraj Chopra won World Athletics Championships gold medal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->