சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தில்.. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு மும்பையில் நடைபெற்ற 44 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 67 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 21 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வந்த வேகத்தில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ்  51 ரன்களும், திலக் வர்மா 35 ரன்களும் எடுத்தனர். மேலும், இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Indians won by 5 wickets


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->