இறுதிப் பந்தில் திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.. தொடர் தோல்வியில் மும்பை இந்தியன்ஸ்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15-வது சீசனில் 33வது லீக் போட்டி நேற்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூரியகுமாரி யாதவ் 32 ரன்னும், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்கள் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் டக் அவுட்டாகி வெளியேறினார். சாண்ட்னர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ராபின் உத்தப்பா 30 ரன்னிலும், ஷிவம் டுபே 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடி அம்பத்தி ராயுடு 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 3 ரன்களில் வெளியேறினார். 

தோனியுடன் பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்து இருவரும் கடைசி வரை போராடினார். பிரெடோரியஸ் 22 ரன்னில் வெளியேறினர். இறுதியில் சென்னை அணி ஒரு பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டும். அதையும் தோனி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். தோனி 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MI vs CSK Match CSK Win


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->