IND vs SA: முதலில் ரோகித் சர்மா, அடுத்து விராட் கோலி.? இந்திய அணியில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி-20 போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து, 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 11ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனிடையே மும்பையில் நேற்று முன் தினம் நடந்த பயிற்சியின் போது ரோஹித்தின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒரு நாள் தொடரிலிருந்து விராட் கோலி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிட அவர் விடுப்பு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி சமீபத்தில் நீக்கப்பட்டு, ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

may be virat kohli withdraws for odi series against sa


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->