சென்னை அணியின் முக்கிய வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை. 

காயத்தில் இருந்து இன்னும் மீளாத காரணத்தால், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மீதமுள்ள போட்டியிலிருந்து ஜடேஜா விலகி உள்ளது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jadeja ruled out in ipl 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->