எனக்கு இதை மட்டும் கொடுங்கள் போதும்., நேற்றைய போட்டி குறித்து ஜடேஜா உருக்கம்!!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிச் போட்டியில். இந்த போட்டியில் 
இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி பெற்றி பெற்றது இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு  நியூசிலாந்து அணி தகுதிபெற்றது. 

இந்த போட்டியில் 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்ற இக்கட்டான சூல்நிலையில் இந்திய அணி இருந்தபோது, களத்தில் ரவீந்திர ஜடேஜா இறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா, 59 பந்துகளில் 77 ரன்கள் வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

ஜடேஜாவும் டோனியும் ஆட்டத்தை இழக்காமல் கடைசி வரை கொண்டு வந்த நிலையில், கடுமையாக போராடியும் இந்திய அணி தோற்றது. இருப்பினும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்திற்க்க்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

நேற்றைய போட்டி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட பதிவில் , ‘ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழ விளையாட்டு எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் நன்றி மட்டுமே போதுமானது அல்ல. 

உங்களின் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து எனக்கு உத்வேகம் கொடுங்கள். என் கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியில் வெளிப்படுத்துவேன். எனது ரசிகர்களாகிய உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jadeja request to his cricket fans


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->