சாய் சுதர்ஷன் அபார பேட்டிங்.. சென்னைக்கு இமாலய இலக்கு.. கோப்பை யாருக்கு.! - Seithipunal
Seithipunal


 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது குஜராத் அணி.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் நேற்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி கன மழையின் காரணமாக இன்று நடைபெற உள்ளது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை -குஜராத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 96 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் வரலாற்றில், இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். அதனைத் தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL final GT target of 215 runs against CSK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->