ஏன் ஐ.பி.எல் நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை கொடுத்தது...?
IPL administration punish Shreyas Iyer
IPL 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 'பஞ்சாப் கிங்ஸ் அணிகள்' மற்றும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' மோதின. இதில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும், தோல்வியடைந்த 'சென்னை சூப்பர் கிங்ஸ்' நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த ஆட்டத்தில் 'பஞ்சாப் கிங்ஸ்' குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
இதன் காரணமாக அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து 'ஐ.பி.எல்' நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது.
இது ஸ்ரேயாஸ் ஐயரின் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை அளித்துள்ளது.
English Summary
IPL administration punish Shreyas Iyer