#BigBreaking | முதலில் களமிறங்கும் சென்னை அணி.!
ipl 2021 final csk bat
14வது ஐபிஎல் தொடரில் இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ஐபிஎல் 12 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில், ஒன்பது முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதில், கடந்த 2010ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
அதே சமயத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி, அந்த இரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வெல்லும் போது, அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர் ஆவார்.
இந்நிலையில், சற்றுமுன் சுண்டப்பட்ட டாஸ்சில், கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.