INDvsAUS: தொடரை கைப்பற்றிய இந்திய அணி! தொடரின் நாயகனாக அபிஷேக் சர்மா! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் தொடங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதலாவது ஓவரிலேயே அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்து ஆட்டத்தை தொடங்கினார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிய கேட்ச் கொடுத்தும், அவர் அதை விடுபடுத்தியதால் அபிஷேக் 5 ரன்னில் அவுட்டாவதை தவிர்த்தார். மூன்றாவது ஓவரில் சுப்மன் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் அடித்து அதிரடியை காட்டினார்.

நான்காவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாகும் நிலைக்கு வந்தார், ஆனால் எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்சை விட்டுவிட்டார். இதனால் அபிஷேக்கிற்கு 11 ரன்னில் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தது.

இதற்கிடையில், மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டதால் நடுவர்கள் முன்னெச்சரிக்கையாக ஆட்டத்தை நிறுத்தினர். சில நிமிடங்களில் கடும் மழை பெய்யத் தொடங்கியது. மழை நீண்ட நேரம் தொடர்ந்ததால், போட்டியை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இறுதியில், நடுவர்கள் போட்டியை ரத்து செய்தனர். இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா, மொத்தம் 163 ரன்கள் குவித்து தொடரின் சிறந்த வீரராக (Series Hero) அறிவிக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDvsAUS t20


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->