தொடர்ந்து 9 வது முறையாக இலங்கை அணியை துவம்சம் செய்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியை நேற்று ஆடியது. முதல் போட்டியில் அமோக வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது நாள் போட்டியில் வெற்றியடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. நேற்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்தது.

இலங்கை அணி நிதானமாக ஆடியது. அதன்பிறகு, 9 விக்கெட்டை இழந்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 275 ரன்கள் எடுத்தது. 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  

கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா-13, ஷிகர் தவான்- 29, இஷன் கிஷன் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்து இருந்தது. அதன்பிறகு, மணீஷ் பாண்டே - சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். மணீஷ் பாண்டே - 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா டக் அவுட்டானார். குருணால் பாண்ட்யா - 35 ரன்களில் வெளியேறினார். 

இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழப்புக்கு 193 ரன்களை எடுத்து தத்தளித்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர் - புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடினார். தீபக் சாஹர்  66 பந்துகளில் அரைசதம் அடித்தார். அந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. 

3 போட்டிகள் கொண்ட தொடரை  2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தொடர்ந்து 9வது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India win India vs srilanka one day match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->