சிஎஸ்கே அணி வீரர் போட்ட வெறித்தனமான பதிவு! காட்டுத்தீயாய் வைரல்! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில் ஐபிஎல் போட்டித் தொடர் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடக்கும் இத் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சிஎஸ்கே வீரர் ரவீந்தர் ஜடேஜா தமிழில் டிவிட் போட்டு தமிழக மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிர், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர் அந்த ட்விட்டர் பதிவில், "என் இனிய தமிழ் மக்களே, தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் தருவாயில், நாங்கள் வேட்டைக்கு தயார். நீங்கள் ஆட்டத்தை காண தயாரா?!. எடுடா வேண்டிய., போடுடா விசில" என்று பதிவிட்டுள்ளார்.

இம்ரான் தாஹிர் போட்ட இந்தப்பதிவு ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ரசிகர்கள் இந்த அடுக்கு மொழி தமிழ் வகியாம் அடங்கிய பதிவை கண்டு கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imron thahir viral tweet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->