இந்திய அணியில் விளையாட எனக்கு முழு தகுதி உள்ளது.! இந்திய வீரர் அதிரடி பேச்சு.!!
i have all rights to play indian cricket team
இந்திய ‘ஏ’ அணி மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவு ‘ஏ’ அணிக்கெதிராக விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்தது. அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடி ஷ்ரேயாஸ் அய்யர் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:
இந்திய அணி மேற்கிந்திய தீவு சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. இந்தத் தொடரின்போது இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதேயான ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது வரிசையில் இந்தியா களம் இறக்கலாம் என்ற பேச்சு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் விளையாட நான் தகுதியானவன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 210 ரன்கள் சேர்த்துள்ளார். 2017-ல் இலங்கைக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அய்யர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் முதன் முறையாக மேற்கிந்திய தீவு மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
i have all rights to play indian cricket team