ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்.. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் இந்த போட்டியில் டெல்லி அணி அபாரமாக பந்து வீசியது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 115 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. 

இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினர். டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 10.3 ஓவரில் 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதற்கு முன்பு டெல்லி அணியின் வீரர் மிட்செல் மார்ஷ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி வீரர்கள் அவர்கள் தங்கியிருக்கும் அறையில் தனிமைப்படுத்தப் பட்டனர். 

அதன் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்றைய போட்டியில் டெல்லி வீரர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில், டெல்லி டெல்லியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு விளையாட்டு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Plays corona Positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->