சிஎஸ்கே.. முதல் வெற்றியை மனைவிக்கு அர்ப்பணித்த ஜடேஜா.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 22-வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தனர். இதில் உத்தப்பா 88 ரன்களை எடுத்தார். ஷிவம் துபே 95 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, அடுத்தடுத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்து, ஆரம்பித்திலேயே தடுமாறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

தொடர்ந்து 4 தோல்விக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஜடேஜா கூறியதாவது, கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதுமே சிறப்பானது. எனவே முதல் வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். முந்திய 4 ஆட்டங்களிலும் எங்களால் எல்லையை கடக்க முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு வந்துள்ளோம். நான் இன்னும் கற்றுக் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK Win Jadeja press meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->