கொரோனா பாதித்த சிஎஸ்கே வீரர் நிலைமை! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சிஎஸ்கே வீரரான  தீபக் சஹார் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி தொடங்க உள்ளது முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளது

இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சிஎஸ்கே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அந்த இரு வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டிருந்த  தீபக் சஹார் குணம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த தகவலை சிஎஸ்கே வின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK CORONA ISSUE CLEAR


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->