129-வது 'மன் கி பாத்': 2025-ல் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகளைத் தொகுத்துப் பேசிய பிரதமர் மோடி!
INDIA 2025 Mann Ki Baat PM Modi
பிரதமர் மோடி தனது 129-வது 'மனதின் குரல்' உரையில், 2025-ஆம் ஆண்டை இந்தியாவின் சாதனைகள் மற்றும் பெருமைமிக்க மைல்கற்கள் நிறைந்த ஆண்டாகப் போற்றினார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளிச் சாதனைகள்:
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலகுக்குப் பறைசாற்றிய இந்த நடவடிக்கை, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியதுடன், பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்தியது.
விண்வெளி ஆய்வு: சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடைந்த முதல் இந்தியர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.
விளையாட்டில் புதிய உச்சம்:
கிரிக்கெட்: ஆண்கள் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றது; மகளிர் அணி முதல்முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
மாற்றுத்திறனாளி வீரர்கள்: பார்வையற்ற பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையை வென்று பாரதப் புதல்விகள் சாதனை படைத்தனர்; மாற்றுத்திறனாளி வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றனர்.
கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம்:
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் ஆகியவை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை உலகறியச் செய்தன.
இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட "மேட் இன் இந்தியா" பொருட்களை மக்கள் வாங்குவது நாட்டின் தன்னம்பிக்கையை மேலோங்கச் செய்துள்ளது.
இளைஞர் சக்தி:
ஜனவரி 12-ஆம் தேதி தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள 'இளம் தலைவர்கள் உரையாடல்' நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை இது ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
English Summary
INDIA 2025 Mann Ki Baat PM Modi