ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி! இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை காண மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்திய அணி இன்று தனது இரண்டாவது ஆட்டத்தில் மலேசியாவை எதிர் கொண்டது. டாஸ் வென்ற மலேசிய அணி பந்து வீச்சை முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்து. 
இந்திய அணியின் தரப்பில் சபனேனி மேகனா 69 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்தனர். 

பின்னர் 182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்த போது மழை குறிக்கிட்டது. மழை  தொடர்ந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
இதன் முலம் தனது இரண்டாவது வெற்றியை இந்திய மகளீர் அணி பதிவு செய்துள்ளது. 

முதல் ஆட்டத்தில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket women team won Asian cup 2nd match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->