குளிர் அலர்ட் முதல் மழை சைகை வரை...! - தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை என்ன சொல்கிறது...?
From cold wave alerts rain forecast What does weather forecast say Tamil Nadu next 7 days
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த வானிலை நிலை உருவாகியுள்ளது.
டிசம்பர் 21 முதல் 24 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 25 அன்று
டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.
டிசம்பர் 26 மற்றும் 27
கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும்.
வெப்பநிலை நிலவரம்
டிசம்பர் 21 முதல் 25 வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிதான மாற்றம் இருக்காது. இருப்பினும், ஒருசில பகுதிகளில் சற்றே குளிர்ச்சி அதிகரிக்கலாம்.
உறைபனி எச்சரிக்கை
டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறைபனி உருவாக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்
இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22–23°C அளவிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
From cold wave alerts rain forecast What does weather forecast say Tamil Nadu next 7 days