தவான், ருதுராஜ் உள்ளிட்ட இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!!
corona positive india camp 7 persons
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மற்றும் கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 6, 9, 11 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகளும், 16, 18, 20 ஆகிய தேதிகளில் இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், அகமதாபாத் வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெட் பவுலர் நவதீப் சைனி, பீல்டிங் கோச் திலீப், பாதுகாப்பு அதிகாரி லோகேஷ் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன் பிறகு இரண்டாவது முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், நெகட்டிவ் என முடிவு வந்தால், மீண்டும் அவர்கள் அணியில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் ஒருநாள் போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
English Summary
corona positive india camp 7 persons