#INDvsPAK : பாகிஸ்தானை போட்டு பொளந்துகட்டிய இந்திய பெண் சிங்கங்கள்.! டார்கெட் செஞ்சுரி, 12 ஓவரில் ஆட்டம் காலி.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டியில் இன்று (மகளிர்) "இந்தியா - பாகிஸ்தான்" அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

மழை காரணமாக 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றியமைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய முனிபா அலி, ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 32 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டக்-அவுட் ஆகி வெளியேற, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். 

ஒமைனா சோஹாலி, ஆயூஷா நசீம் தலா 10 ரன்களுக்கும். அலியா ரியாஸ் 18 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 99 ரன்களை சேர்த்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாபாலி வெர்மா, எடுத்ததும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்பது பந்துகளை சந்தித்த அவர், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 16 ரன்கள் சேர்த்த போது கேட்ச் கொடுத்து தனது விக்கட்டை பறி கொடுத்தார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், அதிரடி ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா வழக்கமான தனது அதிரடியை வெளிப்படுத்தி சுமார் 31 பந்துகளில் அரை சதம் கண்டார்.

மேலும், இறுதிவரை ஆட்டஸ்மிழக்கத்தை அவர் 8 பவுண்டரி, மூன்று சிக்சர் உட்பட 42 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஆடிய மேக்னா 14 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இந்திய அணி 11.4 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டை மட்டும் இழந்து, நிர்ணயிக்கப்பட்ட நூறு ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commonwealth 2022 ind vs pak woman match result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->