சேப்பாக்கம் மைதானத்தில் ‘கலைஞர் கருணாநிதி கேலரி’.. முதல்வர் ஸ்டாலின் திறப்பு.. எம்.எஸ் தோனி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கடந்த 1916 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 35 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மேல் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மைதானத்தில் 500 பேர் உட்காரக்கூடிய வகையில் புதிய பெவிலியர் மற்றும் மேல் தளத்தை அமைக்கும் பணியில் மைதானத்தின் நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் புதிய பெவிலியன் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்.சீனிவாசன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட பெவிலியனுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் 'கலைஞர் கருணாநிதி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chepauk stadium kalaignar Karunanidhi pavilion opening ceremony


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->