அனைத்து கோவில்களிலும் முதலில் விநாயகரை கும்பிடுவது ஏன்? இதற்கு பின் இப்படி ஒரு விஷயமா.?!
Vinayagar why first on all temples
முதலில் விநாயகரை கும்பிடுவது வழக்கம் என்பதை அனைவரும் அறிந்ததே. விநாயகரை வழிபட்டுவிட்டு நாம் தோப்புக்கரணம் போடுவோம். அவ்வாறு தோப்புக்கரணம் போடுவதால் காதுகளில் உள்ள 200 நரம்புகளும் சீராக செயல்படும். இது புது சிந்தனைகளை உருவாக்கி, ஞாபகச் சக்திகளை அதிகரிக்க உதவுகிறது.
தண்டவாளத்துக்கிடையே இடைவெளி விடுதல் ஏன்?
ரயில்பாதையில் தண்டவாளம் அமைக்கும் பொழுது ஒவ்வொரு பக்க தண்டவாளங்களுக்கிடையிலும் 2 செ.மீ அளவு இடைவெளி விட்டே அவற்றை நேராக அடுக்கி அமைப்பர்.
ரயில் அதன்மேல் ஓடும்போது உண்டாகும் வெப்பத்தினால் தண்டவாளம் விரிவடையும் என்பதனாலேயே இந்த இடைவெளி விடப்படுகிறது.
இவ்வாறு இடைவெளியில்லாது தண்டவாளம் அமைக்கப்பட்டிருப்பின் தண்டவாளம் விரிவடைந்து வளைவதனால் ரயில் தடம் புரளும்.
யானை ஏன் காதுகளை அசைத்துக் கொண்டிருக்கிறது?
உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது யானை தன் பெரிய காதுகளை இப்படியும் அப்படியும் அசைத்துக் கொண்டிருக்கும். இப்படி காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி, சப்தத்தை உண்டாக்கும். இந்த சப்தம் மற்ற யானைகளுக்கு தகவல்களை பரிமாறும். வெயில் அதிகமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் காதுகளை அசைக்கிறது யானை.
English Summary
Vinayagar why first on all temples